Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | நாகப்பட்டினம் | மயிலாடுதுறை |
Taluk | மயிலாடுதுறை | குத்தாலம் |
Village | திருவேள்விக்குடி | திருவேள்விக்குடி |
Location | மணவாளேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | விக்கிரமசோழன் | |
Regnal Year | 4 | |
Historical Year | 1122 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதி பின்புறம் மகாமண்டப வடக்குச் சுவர் | |
Summary | பூலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் திருவேள்விக்குடி உடையார் கோயிலில் கூடியிருந்து திருவாவடுதுறைக் கோயில் ஆதிசண்டேஸ்வரர்க்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்தனர். திருவாவடுதுறைக் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் தபஸ்வியாகிய இராஜராஜ வளநாட்டுப் பரவை நாட்டு அழகவிடங்கன் உய்ய வந்தானான ஞானசிவர் என்பவர். இவ்வூரில் திருக்கேதாரம் என்ற பெயரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து கோயில் எடுப்பதற்காக இந்நிலம் வாங்கப்பட்டது, இந்நிலத்திற்காக ஞானசிவரிடமிருந்து 20 காசுகள் பெற்றுக்கொண்டு இறையிலி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலத்தில் ஸ்ரீகோயிலும் திருமுற்றமும் திருநந்தவனமும் திருமடைவளாகமும்க திருக்குளமும் உள்ளிட்டு வேண்டுவன செய்து கொள்ளலாம் என்பதும் அந்நிலத்திற்கு எல்லைகளும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன. இந்த நிலத்தை ஞானசிவரும், அவர் வர்க்கத்தாரும் முன்னின்ற மாஹேஸ்வரருமே இறையிலியாக அனுபவிக்கப் பெறுவார்கள் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. மஹாசபை உறுப்பினர்கள் இறுதியில் கையெழுத்திட்டுள்ளனர். |